“மதுரை ஆதீனம் பேசியதை கண்டுக்காம விட்டிருந்தா முடிஞ்சிருக்கும்.. பெருசாக்கிட்டீங்க”: சென்னை ஐகோர்ட்
சென்னை: "நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது, மதுரை ஆதீனம் பேசியதை அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து, பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை. அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்படியே முடிந்து போயிருக்கும்" என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை ஆதீனம் சர்ச்சை
தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்தது என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் என்றும், முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார் மதுரை ஆதீனம். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொய் குற்றச்சாட்டு
இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது, அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது.
இடையடுத்து, மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆதீனம் மனு
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதீனத்திடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடந்து வந்த மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டு, ஆதீனத்தின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.
பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை - ஐகோர்ட் நீதிபதி
அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி, "நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, மதுரை ஆதீனம் பேசியதை அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து, பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை. அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்படியே முடிந்து போயிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு, விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications