17 வயசு பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது மோகமா.. நீதிபதிகள் அதிர்ச்சி
இளம்பெண்கள் திருமணமான ஆண்களை நம்பி போவது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை: கல்யாணம் ஆன ஆண்கள் மீது அப்படியென்ன ஆசை டீன் ஏன் பெண்களுக்கு? அவர்களை நம்பி வீட்டை விட்டும் ஓடிப்போகிறார்களே என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு என்னவென்றால், "45 வயது நபர் ஒருவரை எங்களது 17 வயது பெண் ஒருவர் காதலித்து அவருடனேயே ஓடிவிட்டதாகவும், எங்கள் பெண்ணை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கேட்டுக் கொண்டதுதான்!!
ரூ.20 கோடி தரேன்.. எனக்கு ஆதரவு கொடு.. எம்பிக்களை அழைக்கும் ராஜபக்சே.. பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிர்ச்சியாக உள்ளது
இந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்குதான் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அமர்வு இதனை விசாரிக்க ஆரம்பித்தது. அப்போது நீதிபதிகள், "இப்படி 17 வயசு பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது காதல் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி திருமணம் ஆன ஆண்களை நிறைய டீன் ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள்.
ஒரே நாளில் 8 மனுக்கள்
இன்றுகூட திருமணமான ஆண்களுடன் சிறுமிகள் ஓடிவிட்டதாக ஒரே நாளில் 8 மனுக்கள் வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சிறுமிகள் வீட்டை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள் என்ற காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விஷயத்தை டிஜிபி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் போன்றோர் மிகவும் சீரியஸாக எடுத்துகொள்ள வேண்டும்.
பட்டியல் வேண்டும்
கடந்த 10 வருடங்களில் எத்தனை டீன் ஏஜ் சிறுமிகள் கல்யாணம் ஆன ஆண்களுடன் ஓடிப் போய் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்." இவ்வாறு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக அரசு பதில்
பின்னர், சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி தங்களுடன் அழைத்து செல்லும் ஆண்கள் மீது பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.