ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தாவின் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வேதாந்தா வழக்கை தான் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகி உள்ளார். இதையடுத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, அதற்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

போலீசார் கலவரக்காரக்கார்களை ஒடுக்குவதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்து உத்தரவிட்டது தமிழகஅரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியயோர் அமர்வு விசாரிக்கும் என பட்டியலிட்டு இருந்தது இந்த வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என நீதிபதி சசிதரன் ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து விலகி உள்ளார். இதனால் உயர்நீதிமன்ற பதிவாளர் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications