“சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டுகிறார்”.. ஜாமீனை ரத்து செய்யக் கோரிக்கை - ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் அதற்கான ஆதாரங்களை திரட்டி வைக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

இதில், மருத்துவ காரணங்களுக்காக சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை 3 மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியபோது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அவர் மீறியுள்ளார். மேலும், அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து, அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவக் குழு அமைக்க தயாராக உள்ளோம்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டி தொடர்ந்து தனது யூ டியூப் சேனலில் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என சவுக்கு சங்கருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும், மனு குறித்து சவுக்கு சங்கரின் தாயார் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications