ரோட் ஷோவுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.. ஒவ்வொரு விதிக்கும் ஒரு வழக்கு! நீதிமன்றம் கருத்து
சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ-க்களுக்கு தமிழக அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் ஒவ்வொன்றையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் சோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தங்கள் கட்சிகள் சார்பில் ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் முன் தங்கள் கட்சியினரை அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண், மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் தனி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் கூட்டங்களுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்கும் போது அதற்கு உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தார்.
த.வெ.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த இடங்களில் எத்தனை பேர் நிற்கலாம்? எத்தனை பேர் அமரலாம் என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது, ரோட்ஷோக்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல் உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? ஏற்கப்பட்டதா? என முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது எனக் கூறி விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications