காவி கலர்.. வள்ளுவர் ஓவியத்துக்கு தடை! அன்பில் மகேஷின் அப்பட்ட அதிகார துஷ்பிரயோகம்.. பறந்த கண்டனம்!
சென்னை: காவி வண்ணம் தீட்டப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தை அகற்றச் சொல்லிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் எனவும், மாணவர்களிடம் திராவிடக் கொள்கையை திணிப்பது அநாகரிகமான செயல் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குமரியில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டை ஒட்டி ஓவியக் கண்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. ஓவியக் கண்காட்சியில் பங்கு கொண்ட மாணவர் ஒருவர் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் தீட்டி இருந்தார்.

கண்காட்சியைப் பார்வையிட வந்த கல்வி அமைச்சர் திரு. அன்பில் பொய்யாமொழி அவர்கள் அந்த ஓவியத்தை நீக்கக் கூறியதுடன் இனி இதுபோன்றவற்றை அனுமதிக்கக்கூடாது என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காவி திருவள்ளுவர்:
ஓவியத்தை கண்காட்சியிலிருந்து நீக்கிய படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தச் செயலானது ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம், அராஜக போக்கு, மிகுந்த கண்டனத்திற்குரியது. நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களது கருத்தை வெளிப்படுத்த அரசியலமைப்பு சட்டமானது உரிமை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, மாணவர்களின் படைப்புத் திறனை, ஆர்வத்தை, நிறத்தை காரணம் காட்டி முடக்குவது சிறுபிள்ளைத்தனமான செயல்.
இந்து முன்னணி:
காவி என்பதை திமுக கட்சியும் அதன் தலைவர்களும் நிறமாக மட்டுமே பார்க்கின்றனர். காவி வண்ணம் என்பது துறவின் உச்சம். மனிதனின் உயர்ந்த நிலையாகும். அத்தகைய நிலையில் தெய்வப்புலவர் வாழ்ந்துள்ளார் என்ற வகையில் திருவள்ளுவரை மாணவர் சிந்தித்து வரைந்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருமுன்பு வரை வெளிவந்த அனைத்து பெரியோர்களின் படங்களும், திருவுருவச் சிலைகளும், ஓவியங்களும், தமிழனின் பாரம்பரியத்தை, ஆன்மீகத்தை பிரதிபலிப்பதாகவே இருந்தது. திமுக ஆட்சியில் தான் திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரை பலரது அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.
திராவிட அரசியல்:
தமிழனின் அடையாளத்தை சிதைத்து தமிழனின் புகழை கீழ்மைபடுத்தியது திராவிட அரசியல்தான் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். திருவள்ளுவர் ஏதோ திமுகவின் கண்டுபிடிப்பு போல சித்தரித்து, அவரை சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். திருவள்ளுவருக்கு வழிபாடு உள்ள கோவில்களை திமுக அமைச்சர் அகற்ற சொல்லுவாரோ? கன்னியாகுமரியில் திமுக கட்சியின் முயற்சியால் தான் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நினைக்கிறார் போலும்.
திருவள்ளுவர் சிலை:
உண்மையில் குமரியில் தற்போதுள்ள இடத்தில் திருவள்ளுவருக்கு திருவுருவ சிலை வைக்க ஏற்பாடு செய்தது இந்து அமைப்புகள் தான். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்தபோது அதனை நிறுவிய தலைவர் ஏக்நாத் ராணடே அவர்கள், அதன் அருகில் உள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருவுருவ சிலை அமைப்பது தொடர்பாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களிடம் ஆலோசித்தார். தமிழக அரசு சார்பில் அதனை நிறுவுவதாக அவர் கூறினார். அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். உண்மையில் அப்போதே அதனை நிறுவியிருந்தால் தற்போது ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கும். அதன்பின் திராவிட அரசியலால் 25 ஆண்டுகள் கழித்துதான் சிலை நிறுவப்பட்டது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி:
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களிடம் திராவிடக் கொள்கையை திணிப்பது அநாகரிகமான செயல். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்பது பற்றியெல்லாம் வாய் கிழிய பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் செயல்படுத்தும் திராணியை தமிழக அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய போக்கு திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்காது. குறுகிய மனப்போக்குடன் செயல்படும் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களையும், தமிழக அரசையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.” என கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications