"இந்துக்களுக்கு இனி பாதிப்பு.. கர்நாடகாவுக்கு மோசமான நாட்கள்” தேர்தல் முடிவால் பொங்கிய அமர் பிரசாத்!
சென்னை : கர்நாடசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கும் நிலையில், "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி முன்னிலை பெற்று வருவதால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, "முதலாளிகளுக்கும் மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர். அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி." எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

இந்நிலையில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழித்து எல்லாவற்றிலும் ஊழலைச் செயல்படுத்துவார்கள். தேச விரோதிகளுக்கு ஆதரவான மாநிலமாக கர்நாடகா மாறும். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications