"இந்துக்களுக்கு இனி பாதிப்பு.. கர்நாடகாவுக்கு மோசமான நாட்கள்” தேர்தல் முடிவால் பொங்கிய அமர் பிரசாத்!
சென்னை : கர்நாடசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கும் நிலையில், "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி முன்னிலை பெற்று வருவதால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, "முதலாளிகளுக்கும் மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர். அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி." எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

இந்நிலையில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழித்து எல்லாவற்றிலும் ஊழலைச் செயல்படுத்துவார்கள். தேச விரோதிகளுக்கு ஆதரவான மாநிலமாக கர்நாடகா மாறும். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன்












Click it and Unblock the Notifications