Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்துக்களுக்கு இனி பாதிப்பு.. கர்நாடகாவுக்கு மோசமான நாட்கள்” தேர்தல் முடிவால் பொங்கிய அமர் பிரசாத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கர்நாடசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கும் நிலையில், "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

Hindus are going to suffer in Karnataka: says BJP leader Amar prasad reddy

இந்நிலையில், இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி முன்னிலை பெற்று வருவதால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, "முதலாளிகளுக்கும் மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர். அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி." எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

Hindus are going to suffer in Karnataka: says BJP leader Amar prasad reddy

இந்நிலையில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழித்து எல்லாவற்றிலும் ஊழலைச் செயல்படுத்துவார்கள். தேச விரோதிகளுக்கு ஆதரவான மாநிலமாக கர்நாடகா மாறும். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+