எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு -பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழாசிரியராக பணியை தொடங்கி கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்களை அடைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ;

புரட்சிக் கவிஞர்
'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு புதுச்சேரியில் 29.04.1891 அன்று மகனாகப் பிறந்தார். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை இணைத்து 'கனகசுப்புரத்தினம்' என்று அழைக்கப்பட்டார். தனது இளம் வயது தொடங்கி தமிழ் மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். 1946 ஆம் ஆண்டு அவரது "அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் 'தங்கக் கிளி பரிசு' வென்றார்.

சாகித்ய அகாடமி
பாரதியாரிடம் நெருங்கிய நட்பு கொண்ட பாரதிதாசன், அன்று முதல் பாரதியை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். 'பிசிராந்தையார்' நாடகத்திற்காக 1970ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் மறைவிற்குப் பிறகு 'சாகித்ய அகாடமி விருது' வழங்கப்பட்டது.

தமிழாசிரியர்
பாரதிதாசன் ஒரு தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. பாவேந்தர் பாரதிதாசன் 86க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

சங்கே முழங்கு
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு', "தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் தான் பாவேந்தர் பாரதிதாசன். தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனை "தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்" என்று பெரியாரும், 'புரட்சிக் கவிஞர்' என்று அண்ணாவும் போற்றினர். 06.05.1990 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் சிலையைத் கருணாநிதி நிறுவி அதனை திறந்தும் வைத்தார். 02.01.1968 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பாவேந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் சிலை திறந்து வைக்கப்பட்டது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications