தீயில் எரிய இருந்த திருக்குறள் ஓலைச்சுவடியை ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க ஒப்படைத்த'கோவை கந்தப்பன்'
சென்னை: தம்மிடம் தீயில் எரிக்க கொடுத்த ஓலைச்சுவடிகள் பழுதடையாமல் இருந்ததால் ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க சமையல்காரர் கந்தப்பன் கொடுத்தார்; அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள் என்று புலவர் செந்தலை கவுதமன் கூறியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் கோவையில் திராவிட சிறகுகள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புலவர் செந்தலை கவுதமன் பேசிய வீடியோ தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் புலவர் செந்தலை கவுதமன் பேசியதாவது:

சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவர் எல்லீஸ். அவரது பெயரில் மதுரையில் இன்றும் நகர் இருக்கிறது. சென்னையில் வீதி இருக்கிறது. அவர்தான் சமஸ்கிருதத்தால் கறைபடியாத ஒரு மொழி தமிழ் என்று உலகுக்கு சொன்னார்.
அந்த தமிழை கொண்டு 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கிறது என்றார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக ஹாரிங்டன் இருந்தார்.

அவரிடம் சமையல் பணி செய்தவர் கந்தப்பன். கந்தப்பனிடம் தீயில் எரிப்பதற்காக ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த ஓலைச்சுவடிகளில் சில பழுதடையாமல் இருந்தன. அவற்றை ஹாரிங்டனிடம் ஒப்படைத்தார் கந்தப்பன். அதன் மூலமாக எல்லீஸுக்கு அந்த ஓலைச்சுவடிகள் சென்றடைந்தன.
அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள். அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த கந்தப்பன், கோவை கிணத்துடக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர். அவர்தான் தமிழன் என்ற அரசியல் சொல்லை முதன் முதலில் கொடுத்த அயோத்திதாச பண்டிதரின் பாட்டன்.
அதுதான் முதன் முதலில் அச்சேறிய திருக்குறள் நூல். அந்த நூல் வெளியான ஆண்டு 1812-ம் ஆண்டு. இவ்வாறு புலவர் செந்தலை கவுதமன் பேசினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications