Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. செங்கல்பட்டுக்கு ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்தது.. அங்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள 'மொந்தா' புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Chennai Tiruvallur Ranipet Chengalpattu

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மாலை வேளையில் கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அறிவித்துள்ளது.

அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னையைப் போலவே கனமழை பெய்து வருகிறது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. காலையில் இருந்தே விடுமுறை அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மழை தற்போது ஓரளவு குறைந்துவிட்ட நிலையில், சிறிய அளவில் சாரல் மழையாகவே சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வருகிறது. புயல் இன்று காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால், ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த மொந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிதாக பாதிப்பு இல்லை. அதேநேரம் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ கனமழை பெய்யும்‌ என்றும், மணிக்கு‌ 30-40 கி.மீ. வேகத்தில்‌ தரைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+