சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. செங்கல்பட்டுக்கு ஏமாற்றம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்தது.. அங்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள 'மொந்தா' புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மாலை வேளையில் கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அறிவித்துள்ளது.
அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னையைப் போலவே கனமழை பெய்து வருகிறது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. காலையில் இருந்தே விடுமுறை அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை தற்போது ஓரளவு குறைந்துவிட்ட நிலையில், சிறிய அளவில் சாரல் மழையாகவே சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வருகிறது. புயல் இன்று காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால், ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த மொந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிதாக பாதிப்பு இல்லை. அதேநேரம் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications