மிரட்டும் டிட்வா புயல்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில் லீவு? விவரம்
சென்னை: புயல் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகியிருந்த புயல், தற்போது தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. இலங்கையில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் சுமார் 56 பேர் பலியாகி இருக்கின்றனர். கடும் வெள்ளம் மற்றும் சூறாவளி காற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை புயல் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து, நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. விடுமுறை என்பதால் நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும், தனது உத்தரவில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளைப் போல, கல்லூரிகளுக்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வுகள், வேறு தேதியில் நடைபெறும் என்றும், மாற்று தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications