Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஏர்போர்ட்டில் 2 மாதங்களில்.. ரூ.167 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்.. பிரபல யூடியூபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறப்படும் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 மாதங்களாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. அவர் இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு எப்படி உதவினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்டை நாடுகள் வழியாக நமது நாட்டிற்குத் தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தங்கக் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

Chennai airport gold

இதற்கிடையே இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறப்படும் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. அவர் இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு எப்படி உதவினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்கக் கடத்தல்: அதாவது இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக முகமது சபீர் அலி என்ற பிரபல யூடியூபர் தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏர்ஹப் என்ற கடையை நடத்தி வந்துள்ளார். ஏர்போர்ட்டில் அந்த கடையை அமைக்கத் தேவையான குத்தகை பணம் அவரிடம் இல்லாத நிலையில், அதற்கும் கூட தங்கக் கடத்தல் கேங்கை சேர்ந்த அபுதாபியில் வசிக்கும் ஒருவர் தான் நிதியுதவி செய்தார்.

அதாவது முகமது சபீரால் குத்தகை தொகை ரூ.70 லட்சத்தைச் செலுத்த முடியாத நிலையில், அபுதாபியைச் சேர்ந்த அந்த நபரே அந்த தொகையைச் செலுத்தியுள்ளார். இவர்களின் கடை சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள் புறப்படும் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அவர்கள் கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்த உதவியுள்ளனர். இதையடுத்து சபீர் அலி மற்றும் அவரது ஊழியர்கள் 7 பேரை சுங்கத்துறை கைது செய்தனர்.

சில்லறைக் கடைகள்: சென்னை விமான நிலையத்தில் சில்லறைக் கடைகளைக் குத்தகைக்கு விடும் வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஏர்ஹப் இந்த கடையை அமைக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. அவர்கள் தங்கக் கடத்தலுக்கு உதவியது வெளிச்சத்திற்கு வந்தவுடன், ஏர்ஹப் உடனான ஒப்பந்தத்தை அவர்கள் ரத்து செய்துள்ளதாக வித்வேதா பிஆர்ஜி தெரிவித்துள்ளது.

இந்த ஏர்ஹப் என்பது பொம்மைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்யும் கடையாகும். ஆனால் பெயருக்குத் தான் இந்த கடை என்றாலும் பின்னணியில் தங்கக் கடத்தல் நடக்கிறது. சென்னை ஏர்போர்ட்டில் transit பயணிகளாக வருவோர் கடத்தல் தங்கத்தை இவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.. அதை வெளியே இருக்கும் நபர்களுக்குக் கொடுப்பதே இவர்கள் வேலையாகும். இதற்காகவே முகமது சபீர் மற்றும் ஏழு பேரை அந்த கேங் வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்துள்ளது.

தங்கக் கடத்தல் கேங்: சென்னையில் வசிக்கும் 29 வயதான முகமது சபீர் அலி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த யூடியூப் சேனல் மூலமாகவே தங்கக் கடத்தல் கேங் முகமது சபீரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு தங்கக் கடத்தல் கும்பல் கொடுத்த ஐடியாவின் பெயரிலேயே சென்னை ஏர்போர்ட்டில் இந்த கடையைத் திறந்துள்ளார்.

சபீர் அலிக்கு சில்லறை விற்பனையில் அனுபவம் இல்லை.. ஆனால் அபுதாபியில் உள்ள இலங்கை தங்கக் கடத்தல் கேங் கொடுத்த பணத்தின் மூலமாகவே அவர் இந்த சில்லறை விற்பனை கடையை தொடங்கியுள்ளார்.. கடந்த பிப். மாதம் இந்த கடை திறக்கப்பட்ட நிலையில், அதற்கான பணியாளர்களை சபீர் ஆன்லைன் மூலமாகவே எடுத்துள்ளார்.

267 கிலோ தங்கம்: அதன் பிறகு கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ. 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்த உதவியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை கமிஷன் கிடைத்துள்ளது.

இந்த ஏர்ஹப்பில் வேலை செய்யும் எட்டு ஊழியர்களும் தற்காலிக ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தான். ஆனால் அவர்களுக்கு சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு வழங்கிய ஐடி கார்ட் இருந்துள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கு இந்த ஐடி கார்ட் வழங்குவது விமான நிலைய விதிகளை மீறுவதாகும். எனவே அது குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+