சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சூப்பர் முயற்சி.. குவியும் பாராட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் அத்தனை வளங்களையும் பயன்படுத்துவது, இயற்கை உரங்களை தயாரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது, வருவாயை உருவாக்குவது என்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கு சென்னையில் தான் இருக்கிறது. சுமார் 1 கோடி பேருக்கு மேல் சென்னை மாநகராட்சியின் தற்போதைய எல்லைக்குள்ளேய வசிக்கிறார்கள். சென்னை பெருநகர சுற்றுப்புறத்தை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 1.5கோடி முதல் 2 கோடிவரை இருக்கலாம்.
இவ்வளவு மக்கள் தினசரி பயன்படுத்தும் குப்பைகளை அகற்றுவதற்கான பணி என்பது மிகப்பெரியது . நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல டன் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மூன்று இடங்கள்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் சுமார் 5,000 டன் குப்பைகள் முறையாக பதப்படுத்தவும், மறுசுழற்சி செய்யவும் திட்டங்களை செய்துவருகிறது மாநகராட்சி. சென்னையில் மிகப்பெரும் குப்பை மேடாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி, மாதவரம் ஆகியவை திகழ்கின்றன.

இயற்கை உரம்
சென்னை மாதவரம் கண்டம்பாளையம் குப்பை கிடங்கில் உள்ள மறுசுழற்சி மையத்தில், சந்தைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் அத்தனை வளங்களையும் பயன்படுத்துவது, இயற்கை உரங்களை தயாரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது. . இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

தெர்மாகோல்கள்
சென்னை மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரங்கள் மலிவான விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன. மேலும் தெர்மாகோல்கள், தரம் பிரிக்கப்பட்டு அவை நிறுவனங்களுக்கு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சாக்குப்பைகளும் பிரித்தெடுக்கப்பட்டு எரிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு
மேலும் 25 டன்னுக்கு மேல் தேங்காய் ஓடுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய சென்னை மாநகராட்சியின் வரம்புகளின் கீழ் ஐந்து அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மரக் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் செங்கற்களும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், வருவாயும் பெருக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இன்று அதிகாரிகளுடன் சென்று இதை ஆய்வு செய்தார்.

பூத்தொட்டி
சரி குப்பை போடும் நாம் என்ன செய்ய வேண்டும்.. நம் வீட்டிலிருந்து குப்பை வெளியேறினால் போதும் என்று நினைக்கக்கூடாது. அப்படி செய்தால் எதிர்காலத்தில் அனைவருக்கும் ஆபத்தாக முடியும். நம் வீட்டில் மக்கும் குப்பையை, ஒரு பூத்தொட்டியில் போட்டு அவற்றை உரமாக்கலாம். பிளாஸ்டிக் மற்றும் நாளிதழ்களை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் கடைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் 80% குப்பை வெளியே செல்வதை தடுக்க முடியும்.

வேலை மிச்சம்
ஒருவேளை உங்களால் இவை முடியாது என்றால், மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து இரண்டு குப்பை தொட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள். அப்படி சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை வண்டிகளில் கொட்டுங்கள். இதை செய்தாலே பெரிய வேலை மிச்சமாகும். ஆனால் பலரும் இப்படி செய்வது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications