ஸ்டாலின் மனதை குளிர வைத்த வில்சன்.. தொட்டதெல்லாம் வெற்றி.. மீண்டும் எம்பி வாய்ப்பு வந்தது எப்படி?
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.

வில்சன்:
ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வில்சன் வந்தாலே "வின் சன்" என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து திமுகவிற்காக, தமிழக அரசுக்காக பல முக்கியமான வழக்குகளை வென்று கொடுத்துக்கொண்டு இருக்கிறார் மூத்த வழக்கறிஞர் வில்சன். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசை திமுக நாடிய போது அவர்கள் அங்கு இடம் வழங்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து போராடி கருணாநிதி விருப்பப்படி அவரை அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ள வைத்த பெரும் பங்கு வில்சனையே சாரும். இவர்தான் திமுக சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இரவோடு இரவாக ஆஜர் ஆனார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரவோடு இரவாக இவர் நடத்திய வாதமே திமுக அப்போது வெல்லவும் காரணமாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யவும் காரணமாகஅமைந்தது.
இரண்டாவது வழக்கு
இது போக இரண்டாவதாக மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி-OBC) 27% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உயர் ஜாதி ஏழையினருக்கான (EWS) 10% இடஒதுக்கீடு 2022ம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு இதனை செயல்படுத்தாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்தது. இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
மூன்றாவது வழக்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. . இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
இப்படி ஆளும் திமுகவிற்காக.. தனிப்பட்ட வகையில் திமுக கட்சிக்காகவும் திமுக எம்பி வில்சன் பெரிய வழக்குகளை வென்று கொடுத்துள்ளார். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
இவர் அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மே 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். இந்த தொடர் வெற்றிகள் காரணமாகவே திமுக எம்பி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் எம்பி தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கு வெற்றி முதல்வர் ஸ்டாலின் மனதை குளிர வைத்திருக்கும்.. இதனால் இவர் மீண்டும் ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.
-
விருட்டென முன்னேறும் திமுக.. ஃபைனல் ஆன தொகுதி பங்கீடு பட்டியல்! யாருக்கு எவ்வளவு சீட்? கசிந்த தகவல்! -
அரசியல் வரலாறே தெரியாமல் பேசி.. அம்பலப்பட்ட விஜய்! திமுக இருமுறை தொடர்ந்து ஜெயித்தது அறியாத பரிதாபம் -
கலைந்துவிடும் நிலைக்கு சென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம்.. என்ன நடந்தது? -
"ஆஃபர் கொடுத்தாவது திமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார்கள்”.. விஜய் மீது ஸ்டாலின் மறைமுக அட்டாக்! -
கூட்டணி ஆட்சி முழக்கம் மொத்தமா மங்கிப் போச்சு.. காங்கிரஸ் தலைகளுக்கு செக் வைத்த திமுக! -
காங்கிரஸுக்கு 28+1! மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்! ஆனாலும் தியாகம் செய்யணுமே! சலித்துக் கொண்ட சோடங்கர்! -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு -
"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்! -
அதிமுகவுக்கு முன் தொகுதி பங்கீட்டை முடித்த திமுக.. அடித்து ஆடும் ஸ்டாலின்.. அமைதி காக்கும் எடப்பாடி!












Click it and Unblock the Notifications