ஒரே சீட்டில் இருந்திருக்காங்க! அலட்சியமாக போன 3 பேர்! இரவு 8.30க்கு ஆடிப்போன பாஜக! நயினாருக்கு ஷாக்
சென்னை: தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ரூ. 4 கோடியை பிடித்த சம்பவம் பாஜகவை உலுக்கி உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு இந்த பணம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
ஒரே மாதிரி சென்றனர்: மூன்று பேரும் மூன்று பேக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு தைரியமாக ஒரே சீட்டில் அமர்ந்து சென்றுள்ளனர். போலீஸ் பிடிக்காது என்ற உறுதியில் இவர்கள் இருந்துள்ளனர். அல்லது போலீஸ் கண்டிப்பாக பிடிக்கும் என்று உறுதியாக இருந்துள்ளனர்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர். கணக்கில் வராத இந்த பணத்தை எடுத்து சென்ற போது போலீஸ் சோதனையில் சிக்கியது. இந்த தகவல் நேற்று இரவு வெளியானதும் மொத்தமாக பாஜக அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, ஓட்டிற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று வழக்கம் போல பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு தற்பொழுது பண மூட்டையுடன் மாட்டி கொண்டனர் பாஜகவினர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி பணத்தை எடுத்து சென்றோமென கைதானவர்கள் வாக்குமூலம் என்று திமுக சார்பாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது, என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
தொடரும் ரெய்டு: இதை தொடர்ந்தே நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மற்றும் உறவினர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை செய்து வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகன் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டுவந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications