சென்னையில் மால்களில் மதுபான வெண்டிங் மிஷின்! எப்படி செயல்படும்? டாஸ்மாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள 4 மால்களில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவப்பட்டு உள்ளது. இது எப்படி செயல்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது.

இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே வயதிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயது குறைவானவர்களுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மதுபானங்கள் Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது.

இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
எப்படி இயங்கும்?: இந்த வெண்டிங் மெஷின்களில் இருக்கும் மதுபான வகைகளை தேர்வு செய்ய முடியும்.
அதில் கடைகளில் உள்ள மதுபானங்கள் காட்டப்படும். அதில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் அதன் தொகை காட்டப்படும். அந்த தொகையை அங்கே உள்ளே பகுதி வழியாக கொடுக்க வேண்டும்.
தொகை சரி செய்யப்பட்ட உடன் மதுபாட்டில் கீழே இருக்கும் பகுதி வழியாக கொடுக்கப்படும்.
இது உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள வெண்டிங் மிஷின் முறை ஆகும்.

சென்னையிலேயே மெட்ரோக்களில் கூல் ட்ரிங்ஸ் கிடைக்க வெண்டிங் மெஷின்கள் உள்ளன.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
அதனால் கடைகளின் உள்ளேயே வயதிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயது குறைவானவர்களுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மதுபானங்கள் Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications