Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் உள்ள கைதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துள்ளது.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கடலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளார் இவரின் தாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரைப் பார்க்க ஆறு வாரம் பரோல் கேட்டு சரவணனின் மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இது குறித்து பதிலளிக்க சிறைத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

how many coronavirus cases have been confirmed in prison : HC Ask TN govt

மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய். தற்போது சிறைகளில் அதிகளவிலான கொரோனா தொற்று பரவி வருவதாக தெரிவித்தார். மேலும் சரவணன் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இதனையடுத்து சிறைச்சாலையில் கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது? இதுவரை எவ்வளவு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+