தமிழகத்திற்கும் ஸ்பெஷல் விமானம்.. எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேரை அழைத்து வருகிறார்கள்? லிஸ்ட்
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க கூடிய, இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் மூலமாக அழைத்து வரும் பணிகளை இந்திய அரசு துவங்கியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பீதியில் இருக்கக்கூடிய இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து நிலையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நாடுகளிலிருந்து இந்தியாவின் எந்த ஊருக்கு இவ்வாறு விமானம் மூலமாக அழைத்து வரப்படுவார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 64 விமானங்கள் மூலமாக 12 நாடுகளிலிருந்து சுமார் 14 ஆயிரத்து 800 பேரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி
ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகியவற்றிலிருந்து கொச்சி, கோழிக்கோடு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், டெல்லி, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கு 2000 பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத், தம்மம் ஆகிய நகரங்களில் இருந்து, கோழிக்கோடு, டெல்லி, கொச்சி ஆகிய நகரங்களுக்கு 1000 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள்.

கத்தார், பக்ரைன், ஓமன்
கத்தார் நாட்டின், தோஹா நகரில் இருந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்துக்கு 400 பேர் அழைத்து வரப்படுவார்கள். பக்ரைன் நாட்டின் மனாமா நகரில் இருந்து கொச்சி மற்றும் கோழிக்கோடு நகரங்களுக்கு 400 பேர் அழைத்து வரப்படுவார்கள். ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து, கொச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் 450 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள்.

கிழக்கு நாடுகள்
வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் இருந்து, ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களுக்கு 1, 400 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து, அகமதாபாத், மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களுக்கு 1250 பேர் அழைத்து வரப்படுவார்கள்.

சிங்கப்பூர், மலேசியா
சிங்கப்பூர் நாட்டில் இருந்து, திருச்சி, மும்பை, அகமதாபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு 1,250 பேர் அழைத்து வரப்படுவார்கள் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து, டெல்லி, மும்பை, கொச்சி, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 1,750 பேரை அழைத்து வருகிறது.

அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம்
பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரிலிருந்து, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 1,750 பேர் அழைத்து வரப்படுவார்கள். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் நகரங்களில் இருந்து, சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 2100 பேர் அழைத்து வரப்படுவார்கள்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications