சென்னை மக்களே.. மழை நீர் பைக் சைலன்சர் உள்ளே போகாமல் இருக்க இப்படி பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் தான் மழைநீரில் டூவீலர் செல்லும்போது சைலன்சர் உள்ளே தண்ணீர் செல்லாமல் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

How to avoid rain water entering to the bike silencer when drive in Chennai floods?

சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில் தான் சென்னையில் நேற்று முதல் மழை பெய்யவில்லை. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் வெள்ளத்தில் கார்கள், ஆட்டோக்கள் அடித்து செல்லப்பட்டன. அதோடு டூவீலர்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் நுழைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னையில் மழை இல்லாவிட்டாலும் சாலையில் மழைநீர் என்பது தேங்கி உள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாகனங்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக டூவீலர்களை பொதுமக்கள் பயன்படுத்தி தொடங்கி உள்ளனர். இப்படி செல்லும்போஐ சைலன்சர் உள்ளே மழைநீர் சென்று டூவீலர்கள் சாலையிலேயே ஆப் ஆகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மெக்கானிக் கடைகள் தற்போது இல்லாததால் இதுபோன்ற பிரச்சனை வாகன ஓட்டிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் வேறு வழியின்றி அவர்கள் தங்களின் டூவீலர்களை மீண்டும் ஸ்டார்ட் செய்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மழைநீர் தேங்கிய பகுதியில் டூவீலரில் சென்றால் சைலன்சர் உள்ளே தண்ணீர் போகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ என்பது காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது காஞ்சிபுரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் 2 பேர் டூவீலரில் செல்கின்றனர். அந்த டூவீலரின் சைலன்சர் பகுதியில் வெள்ளை நிற பைப் மாட்டப்பட்டுள்ளது. அதாவது சைலன்சரில் இருக்கும் துளையில் வெள்ளை நிற பைப் மாட்டி ‛எல்' பெண்ட் மூலம் மேல்நோக்கி சுமார் 4 அடி உயரத்துக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தண்ணீரில் டூவீலர் சென்றாலும் கூட சைலன்சரில் தண்ணீர் செல்லாது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது நல்ல ஐடியாவாக இருக்கே என கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+