நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடிய பிரபல கொள்ளையன் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?
சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் நடிகர் விஜயகுமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முனுசாமி என்ற கொள்ளையன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றார். மேலும் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவின் நினைவாக வைத்திருந்த செல்போனையும் திருடி சென்றுள்ளார். இதேபோல் பல வீடுகளில் முனுசாமி திருடியிருக்கிறார். அவர் மீது 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த முனுசாமி 21 வருடங்களுக்கு பிறகு போலீசில் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னையில் பல்வேறு வகையான கொள்ளையர்கள் வலம் வருகிறார்கள். என்னதான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், திருடர்கள் திருடுவது குறையவே இல்லை.. சிசிடிவி கேமராக்களை பொருட்டாக கூட மதிக்காமல் திருடிவிட்டு வெளியூர்களுக்கு தப்பி செல்கிறார்கள். சில திருடர்கள், திருடும் போது, சிசிடிவி அறையில் உள்ள ஹார்ட் டிஸ்குகளையும் திருடி செல்கிறார்கள். க்ளவுடில் சேவ் ஆகி இருந்தால் மட்டுமே கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியும் என்கிற நிலை ஏற்படுகிறது. இது இன்றைக்கு உள்ள நிலை.. என்னதான் திருடர்கள் திருடி தப்பித்தாலும், எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள்.. அதேநேரம் ஒரு திருடன் 21 வருடங்களாக சிக்கவே இல்லை.. இப்போது தான் சிக்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்த முனுசாமி என்பவர் எப்படிப்பட்ட வீடுகளாக இருந்தாலும பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார். இவர் சென்னையில் தலைமைச் செயலக காலனி, ஆவடி, மதுரவாயல், திருமுல்லைவாயில், ஜெஜெ நகர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 21 வருங்களுக்கு முன்பு கொள்ளையன் முனுசாமி, திருமுல்லைவாயிலில் ஒரு திருட்டில் ஈடுப்பட்டிருந்த போது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த முனுசாமி தலைமறைவானார். மீண்டும் பல்வேறு இடங்களில் திருடினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல திரைப்பட நடிகர் விஜயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முனுசாமி, அங்கிருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார். மேலும் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவின் நினைவாக வைத்து இருந்த செல்போனையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.. இந்த திருட்டு சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே முனுசாமி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில் முனுசாமி மதுராந்தகத்தில் பதுங்கி இருப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications