ஓயாமல் புறணி.. மனைவியின் வாயிலேயே உலக்கையால் குத்திய கணவர்.. சென்னையில் பயங்கரம்
சென்னை: சென்னை திருவெற்றியூரில் ஓயாமல் குடும்ப பிரச்சனை பற்றி சகோதாரியிடம் புறணி பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார். கொலை செய்த கையோடு போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 51 வயதாகும் துரை வேலைக்கு செல்லாமல் வீட்டில் சுற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி இந்திராணி (48) திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்திராணி அதே தெருவில் வசித்து வரும் சகோதரியான கஸ்தூரி என்பவரது வீட்டுக்கு சென்று, தன் கணவர் வேலைக்கு செல்லாமல் சுற்றுவது குறித்தும், தனது குடும்ப பிரச்சினை குறித்து அடிக்கடி கூறுவாராம். இது துரைக்கு பிடிக்காததால் அவர் தொடர்ந்து மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்திராணி, தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று தலைக்கு 'டை' அடித்துவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது துரைக்கும், இந்திராணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாகி உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த துரை, வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி இந்திராணியின் தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த இந்திராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்குள் இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தார்கள்.
சண்டை பற்றி அறிந்ததும் அதே பகுதியில் வசித்து வரும் இந்திராணியின் சகோதரி கஸ்தூரியும் அங்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த துரை, "இனிமேல் இந்திராணி உங்கள் வீட்டுக்கு வரமாட்டார்" என கூறிவிட்டு நேராக அங்கிருந்து கிளம்பி சென்றார்.இதையடுத்து உள்ளே சென்ற கஸ்தூரி, வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அவரது சகோதரி இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே மனைவியை கொலை செய்த துரை, நேராக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் காதர் மீரா மற்றும் போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications