டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்த போது மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வரலட்சுமி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் இவர்களது வழக்கை நீதிபதி விசாரித்து கொண்டிருந்தார். அப்போது சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து அவரை அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அதுவும் போலீஸார் முன்பு மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications