உட்கார வச்சேன், சாப்பாடு கொடுத்தேன், 15 நிமிஷம் டைம் கொடுத்தேன்.. இதுதான் பொன் மாணிக்கவேல் ஸ்டைல்!
பொன்.மாணிக்கவேல் பிரிவு உபச்சார விழாவில் உருக்கமாக பேசினார்.
Recommended Video

சென்னை: "இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்" என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக கூறியுள்ளார்.
தமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டார் பொன்.மாணிக்கவேல். எத்தனை எத்தனை சிலைகளை மீட்டெடுத்தார் இவர்!!
குறிப்பாக 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக எடுத்து கொண்டாடினார்களே.. இதைவிட வேறு என்ன சிறப்பு ஐஜி-க்கு இருக்க முடியும்?
[பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது! ]

உருக்கம்
நாளையுடன் இவரது பணி நிறைவடைவதையொட்டி, சென்னையில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பொன். மாணிக்கவேல் தன்னுடன் சக காவலர்களாக பணியாற்றியவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அவரது உருக்கமான பேச்சின் வரிகள்தான் இவை:

கைது செய்ய வேண்டும்
"ஒரு குற்றம் நடந்துவிட்டால், அந்த பகுதியில் முழுமையாக இறங்கி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், தவறு என்று தெரிந்துவிட்டால் உடனே கோர்ட் அனுமதி பெற்று கைது செய்து விட வேண்டும். இது சம்பந்தமான வழக்குகள், சட்டங்களை எல்லோரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடிக்க கூடாது
எப்ஐஆர் போட போலீஸ்காரர்கள் பயப்படவே கூடாது. எப்பவுமே குற்றவாளிகள் வாக்குமூலம் தந்தால் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைச்சிக்கணும். அப்போதான் அது சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். குற்றவாளியை அடிக்கிறதால உண்மையை வரவழைக்க முடியாது.

சாப்பாடு கொடுத்தேன்
நான் கூட கேஸ் நடத்தினேன். அப்போ குற்றவாளியை கூப்பிட்டு விசாரணை நடத்தும்போது அவருக்கு ஒரு சேர் கொடுத்து உட்கார வச்சேன். நான் சாப்பிட்ட சாப்பாட்டைதான் அவருக்கும் கொடுத்தேன். எனக்கிருக்கும் எல்லா வசதிகளும் அவருக்கும் இருக்கிற மாதிரிதான் பார்த்துக்கிட்டேன். ஆனா ஒரு கேள்வியை கூட நான் கேக்கல.

ஒப்புக் கொண்டார்
அதுக்கு பதிலா, இதுவரை அவர் செய்த தவறுகளை எல்லாம் அவருக்கு எடுத்து காட்டி, அதுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் சட்டத்தில் கிடைக்கும் என்பதையும் எடுத்து சொல்லி 15 நிமிஷம் டைம் கொடுத்தேன். அப்பறம் அவராகவே என்கிட்ட வந்து, ஒன்னு விடாமல் இதுவரை செய்த தவறுகளை என்னிடம் மளமளவென சொல்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இளைஞர்கள்
போலீஸ்காரர்கள் நினைத்தால் ஒரு குற்றவாளியை ஆறே மாசத்தில திருத்த முடியும். அந்த அளவுக்கு கடமை இருக்கு. என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டு செல்கிறேன்" என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications