என்கிட்ட இருப்பது ஒயிட் தான்.. கவலை இல்லை.. 2 ஆயிரம் வாபஸ் குறித்து தமிழிசை சொன்னதை நோட் பண்ணீங்களா
சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட் என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்ட பிறகு மத்திய அரசு புதிய ரூ.2 ஆயிரம் தாள்களை அறிமுகப்படுத்தியது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் சமீப காலமாக மக்கள் மத்தியில் குறைந்துள்ள நிலையில், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும் என்றும் ரிசர் வங்கி அறிவித்து இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், புதுவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இது குறித்து பேசினார்.
புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுத்தேர்வுகளில் தோல்வி பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள கூடாது. தேர்வு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்.. வாழ்க்கை இன்னும் நிறைய உள்ளது.
தேர்வு எழுதாத பல பேர் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். எனவே மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டும். தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்கு மாரல் வகுப்புகள் நடத்த வேண்டும். தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்யப்படும்.
புதுவையில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காத்துக் கொண்டு இருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லியின் நிலை வேறு, புதுவையின் நிலை வேறு. மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவது நாராயணசாமிக்கு கவலையாக இருகிகிறது" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "இந்த தடை குறித்து எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட்... நோட்டும் ஒயிட்... 2 ஆயிரம் நோட்டு தடை பற்றி விவரங்களை அறிந்து பதிலளிக்கிறேன்" என்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications