Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னிப்பு கேட்க முடியாது.. ரூ. 500 கோடி இழப்பீடும் தர முடியாது - திமுக நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.500 கோடி இழப்பீடும் தர முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக குறித்த தனது குற்றச்சாட்டு உண்மையே எனக் குறிப்பிட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அண்ணாமலை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சிலவற்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுகள் என்று திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

I cant apologize: Annamalai reply to the notice sent by dmk

திமுக சார்பில் நோட்டீஸ் : மேலும், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக பற்றி அவதூறாக தகவல்களை வெளியிட்ட அண்ணாமலை 48 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார்.

அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், உதயநிதி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுக்கு, அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி பெற்றுக்கொண்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தன் மீது வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும், இழப்பீடாக 500 கோடியே ஒரு ரூபாய் கேட்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை பதில் : இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய நோட்டீஸூக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், "சட்டத்துக்கு புறம்பாகவோ, அவதூறாகவோ நான் எதையும் கூறவில்லை. திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதில் வெளியிட்ட உண்மைகள், புள்ளிவிவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் முயற்சியாகவும், எனது குரலை ஒடுக்குவதற்காகவுமே திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை. பொதுநலனுக்காக மட்டுமே திமுகவினரின் முறைகேடுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திமுக கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+