ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளேன்.. ஆதரவு அளிப்பார்.. கமல்ஹாசன் பரபர பேட்டி!
நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்டு இருக்கிறேன், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்டு இருக்கிறேன், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மிக தீவிரமாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.
வைட்டமின் "ப" வை நம்பி அதிமுக.. கரை சேருமா திமுக.. எடுபடாத அமமுக.. பரமக்குடியில் வெல்வது யார்?
ஆதரவு கேட்டேன்
கமல்ஹாசன் தனது பேட்டியில், நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்டு இருக்கிறேன். கட்சி அலுவலகத்திற்கு வந்தவரிடம் ஆதரவு கேட்டு உள்ளேன். அவரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் இது தொடர்பாக பேசினேன்.
என்ன சொன்னார்
கண்டிப்பாக செய்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர் யோசித்து முடிவெடுப்பார் என்று நம்புகிறேன், என்று கமல்ஹாசன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தேர்தலில் ஆதரவு
நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் ஏற்கனவே ஆதரவு கேட்டு இருந்தார். ரஜினிகாந்த் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பினால் அளிக்கலாம். அது அவரது விருப்பம். இது தொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே என்ன கூறினார்
இந்த நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த்திடம் மீண்டும் கமல்ஹாசன் நேரடியாக ஆதரவு கேட்டு இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இதுகுறித்து இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.