"ரசிகர்கள் என் முடிவைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்".. ஸ்ரேயா கோஷல்
சென்னை: பிரபல பின்னணி பாடகரான ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 13 ஆம் தேதி கொல்லகத்தாவில் நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளதாகவும், ரசிகர்கள் தன்னைப் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நேரத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இசை நிகழ்ச்சி நடக்கும் தேதியை மாதத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மருத்துவரின் கொலைக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதும், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பிரபல பின்னணி பாடகரான ஸ்ரேயா கோஷல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். இவர் 'ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் டென்வர், சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியிருந்தார். கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இசைக் கச்சேரியை நடத்தி முடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் செப்டம்பர் 14 ஆம் தேதியும், துபாயில் செப்டம்பர் 21 ஆம் தேதியும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.
கொல்கத்தா சம்பவத்தால் நாடே அதிர்ந்து போயுள்ள இந்த நேரத்தில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்காது என்று கருதிய ஸ்ரேயா கோஷல் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. கொல்கத்தாவில் செப்டம்பர் 14 ம் தேதி நடைபெறவிருந்த இசைக் கச்சேரியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளிவைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சி பலராலும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாம் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து பெண்களுடைய பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இசை நிகழ்ச்சிக்காக நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுகள் புதிய தேதி வரை செல்லுபடியாகும். உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா கோஷலின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இந்த முடிவுக்குப் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications