மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி
சென்னை: முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி ஆகியோர் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திராவிட இயக்க கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை. தமிழர்களின் உரிமையை நிலைநாட்டும் அரணாக திமுக கூட்டணி இருக்கும் என்றார்.
மேலும், அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என்றும், ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கூறிய வைகோ, ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications