ஆஜராக முடியாது.. என்ன பண்ணுவீங்க.. ஒசூரிலிருந்து சவால் விட்ட சீமான்.. வீட்டின் முன் குவிந்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரை சீமான் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர் போலீசாருக்கு சவால் விடுத்துள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழித்து போலீசாருடன் தகராறு ஏற்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். சீமான் வீட்டில் இன்று நடந்த களேபரத்தை அடுத்து அங்கு நாதகவினர் வருகை புரிந்து வருவதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

seeman naam tamilar katchi

சீமானின் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக என்னை அசிங்கப்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஒட்ட வேண்டும், நான் இனி ஆஜராக மாட்டேன்.. நீங்கள் என்ன செய்வீர்கள்.. உங்களால் என்ன செய்ய முடியும் என்று சீமான் சவால் விடுத்துள்ளார். அவர் ஓசூரில் இருந்து பேட்டி அளித்த நிலையில் சென்னை நீலாங்கரை சீமான் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.

சீமான் காவலாளி மிரட்டல்

விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.


சீமான் துப்பாக்கி

சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்

2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கறிஞர் மறுப்பு

சீமான் வழக்கறிஞர் டீம் அளித்துள்ள விளக்கத்தில், சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார். நோட்டீஸ் ஒட்டிய பின் அதில் உள்ள தகவலை தெரிந்த பின்னரே கிழித்துள்ளனர். சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக வந்த தகவலால் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார், என்று சீமான் வழக்கறிஞர் டீம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+