அதிமுக கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்.. வேட்பாளர் தேர்வை பாருங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலின் போது தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்தான முடிவை நான் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கட்சிக்காக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த வேலையில் இறங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சென்னையில் இருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதாகவும், எடப்பாடி மாவட்ட செயலாளர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி, இன்றைய கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது உட்கட்சி விவகாரம், அது குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தலை எதிர்கொள்ள மிக வேகமாக ஆயுத்தமாகி வருகிறோம் என கூறினார்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை அதிமுக தீவிரம் காட்டியுள்ளது. இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகிவிட்டது. தற்போதைக்கு SDPI கட்சி மற்றும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதால் அவர் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications