Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா இல்லனா அண்ணாமலை ஆடு மேய்க்கனும்.. ஐபிஎஸ் ஆனது அண்ணா,பெரியார் போட்ட பிச்சை -ஆர்.எஸ்.பாரதி போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியானது அண்ணாவும், பெரியாரும் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.

தந்தை பெரியாரின்‌ ஒவ்­வொரு பிறந்த நாளும்‌ "சமூ­க­நீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும்‌; அன்றைய தினம் "சமூ­க­நீதி நாள்‌ உறுதிமொழி ஏற்க வேண்டும்‌" என தமிழ்­நாடு முத­ல­மைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறி­வித்­தார்.

If Anna is not born Annamalai will tending goats - DMK RS Bharathi speech

அதற்கேற்ப தந்‌தை பெரியார்‌ பிறந்த நாளான இன்று காலை 10.30 மணி அளவில்‌ சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்தில்‌ உள்ள அறிஞர்‌ அண்ணா - கருணாநிதி சிலை முன்பு, திமுக அமைப்புச்‌ செய­லாளர்‌ ஆர்‌.எஸ்‌.பாரதி தலை­மையில்‌ "சமூ­க­நீதி நாள்‌ உறு­தி­மொழி ஏற்பு" நிகழ்ச்சி நடை­பெற்றது. திமுக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "அண்ணாமலைக்கு அரசியலே தெரியவில்லை. ஒரு பழமொழி கிராமத்தில் சொல்வார்கள். 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.' என்று. அதுபோல அண்ணாவுடைய பெருமை அண்ணாமலைக்கு தெரிவதற்கு நியாயமில்லை.

அவர் கொஞ்சம் மரியாதையாக பேசுவது இனி நல்லது. காரணம் திமுகவும் தமிழ்நாடு மக்களும் அண்ணாவை பற்றியும் பெரியாரை பற்றியும் எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ, அனுமதிக்கவோ தயாராக இல்லை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பேசி இருக்கும்போதுகூட அண்ணாதுரை என்று அவர் சொல்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்றுதான் அவரை எல்லோரும் அழைக்கிறார்கள். அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த இந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார்.

அழிவு ரொம்ப நாளில் இல்லை. நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அண்ணாவை பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு.. தவறான புள்ளி விபரங்களை எல்லாம் அண்ணா பற்றி சொல்கிறார். 1956 ல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணாமலைக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.

1949 லேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தனிப் பெரும் தலைவராக தமிழ்நாட்டில் பவனி வந்தவர். 1949 லேயே கட்சி தொடங்கியவர். அவரை பார்த்து இப்படி கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

ஆடு மேய்க்கிற அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது அண்ணா போட்ட பிச்சை. பெரியார் போட்ட பிச்சை என்பதை நான் இன்னும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக இருந்திருக்கும். அண்ணாமலைக்கு தெரியாது.

அண்ணாமலையி பாட்டனார் இருந்திருந்தால் அண்ணா உடைய பெருமையை சொல்வார். அவர் இப்படி பேசுவதை நிறுத்துக்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு மக்கள் எழுந்தால், அவர் எங்கு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரோ அந்த கர்நாடகாவுக்கு மிக விரைவிலேயே ஓடிப்போகிற நிலைமை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+