கூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால், இதைவிடக் கூடுதல் இடங்களில், வெற்றி பெற்றிருப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எல்லாக் கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் அதிமுக விருப்பம் என்று அதற்கு பதிலாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, இவ்விரு தலைவர்களும் அளித்துள்ள இந்த தனித்தனி பேட்டி என்பது அரசியல் ரீதியாக தற்போது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. இதில் 85 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் 7 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில்தான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவேளை பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால் இதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். காரணம், நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், தாங்கள், போட்டியிட, விரும்பிய அளவுக்கான பதவி இடங்கள் கிடைக்கவில்லை என்பது இவரது பேட்டியின் சாராம்சம். இதுகுறித்து நிருபர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பினர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி கூறுகையில், அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். திமுக கூட்டணியை தவிர்த்து, தனித்து போட்டியிட முன் வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கட்சியின் தனி பலம் தெரியவரும் என்றார். ராஜேந்திர பாலாஜி, பொன்.ராதாகிருஷ்ணனை, நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. அதேநேரம் திமுக கோதாவில், இறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

கடந்த தேர்தல்
அதேநேரம், கடந்த முறை, அதாவது, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தது. அப்போது வெறும் 31 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அப்படி இருந்தும் கூட இப்போது தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றிருக்க முடியும் என்று எதை வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரோ, தெரியவில்லை.

பாஜக பலம்
ஒருவேளை 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளதால், இப்போது தமிழகத்தில் பாஜக பலம் பெற்ற கட்சியாக உருவெடுத்து விட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கருதியிருக்கக் கூடும். அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த கட்சி உள்ளாட்சித் தேர்தலில் சாதித்ததை மனதில் வைத்து இப்படி கூறியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications