திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக உள்ளதா? கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க -சகாயம்
சென்னை: திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அவர், "நான் 2013 ஆம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்தேன்.
அப்போது டிசம்பரில் எளிய நெசவாளர்களுடைய வாழ்வை மேம்படுத்தவும், தமிழர்களுடைய அழகிய ஆடை மரபாக இருக்கக்கூடிய வேட்டி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முறையாக நாங்கள் கோ ஆப் டெக்சில் முடிவெடுத்தோம்.

வேட்டி தினம்
2014 ஜனவரியில் பொங்கலுக்கு முன்பாக ஏதாவது ஒருநாளில் வேட்டி தினம் கொண்டாட வேண்டும் என நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கடிதம் எழுதினேன். 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேட்டி தினம் கொண்டாடினார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதேபோல் நான் கடிதம் எழுதினேன். அவர்களும் அணிந்து வந்தார்கள்.

தேசிய கல்விக்கொள்கை
தேசிய கல்விக்கொள்கை, தமிழக கல்விக்கொள்கை பற்றியெல்லாம் ஆய்ந்திட நான் விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். 1970 களுடைய மத்தியில் அன்று நெருக்கடி நிலையின் காலக்கட்டத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. என்னை பொறுத்தவரை கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திமுக அரசிடம் கோரிக்கை
இன்றை திமுக அரசு உண்மையிலேயே மாநில சுயாட்சியில் உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் இந்த கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவர வெகு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்ள வேண்டும். எனவே தேசிய கல்விக்கொள்கை என்ற கேள்விக்கே இடமில்லை.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்
இது ஒரு துணைக்கண்டம். அது பல்வேறு வரலாறு, கலாச்சார, பண்பாடு, மொழி, இனம் பின்புலத்தை கொண்ட தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒரு தேசத்தில் கல்வியை பொறுத்தவரை அந்தந்த தேசிய இனங்கள் நிரம்பி வாழக்கூடிய மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்." என்றார்.
-
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
விட மாட்டேங்குறாங்க.. உள்ளே இருந்துகிட்டு கலகம்! கூட்டணி பேச்சில் இழுபறி.. திமுகவுக்கு பெரிய தலைவலி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications