கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே? என்ன செய்வார்கள்?
நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்பேன். அதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும்.
நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார். இதனால் இவர்கள் இருவரும் இணைய போகிறார்களா என்று கேள்வி எழுந்தது.

என்ன கேள்வி
இந்த நிலையில் கமலின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசினார். அதில், மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அரசியலில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

வலிமைப்படுத்தி உள்ளது
இது இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற கேள்வியை வலுப்படுத்தி இருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் இவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவார்களா. ரஜினியும் கமலும் சினிமாவில் இருப்பது போலவே நிஜ அரசியல் உலகிலும் நட்பாக இருப்பார்களா என்று கேள்விகள் எழுந்தது.

ஆனால் என்ன
ஆனால் நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், ஒருவேளை வெற்றியும் பெற்றால் யார் முதல்வர் ஆவார். ரஜினி அல்லது கமல் யார் விட்டுக் கொடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆசை உள்ளது
ரஜினி கமலின் இரண்டு பேருக்கும் முதல்வர் ஆசை உள்ளது. கமல்ஹாசன் பல மேடைகளில் தன்னுடைய முதல்வர் ஆசையை வெளிப்படுத்தி விட்டார். அதனால் இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படி உடன்படிக்கை ஏற்படும், சண்டை வராதா என்று விவாதங்கள் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா நிலை
ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிபெற்றால் மகாராஷ்ராவில் தற்போது சிவசேனா மற்றும் பாஜக இடையே நிலவும் அதே நிலைதான் உருவாகும். இரண்டு பேரும் முதல்வர் பதவிக்கு ஆசைபடுவார்கள். அது பெரிய அரசியல் சிக்கலுக்கு கூட வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications