கொடூரம்! சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னை ஐஐடியில் மேற்கு வங்க பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2017ஆம் ஆண்டு முதல் வேதியியல் துறையில் பிஹெச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
அவருடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் சக மாணவர்கள் கடந்த 2020இல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆராய்ச்சி மாணவி
இது குறித்துச் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மாணவி துறைப் பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், ஆராய்ச்சி மாணவியின் புகாரைப் பேராசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார். ஐஐடி வளாகத்தில் உடல் ரீதியாகத் தான் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை இல்லை
இருப்பினும், இது தொடர்பாகக் கடந்த ஜூன் 2021இல் பதியப்பட்ட வழக்கில் பாலியல் வன்கொடுமை, வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஐஐடி நிர்வாகமும் சரி, போலீசாரும் சரி இந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உளவியல் ரீதியாக அந்தப் பெண் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

மாதர் சங்கம்
இந்நிலையில், கடந்த 22இல் பாதிக்கப்பட்ட மாணவி தமிழக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவர், இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றக்கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை ஐஐடி
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மொத்தம் 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளிப்போம் என்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை எழுப்பிய மாணவியின் விவகாரத்தை விசாரிக்க அனைத்து செயல்முறைகளையும் ஐஐடி மெட்ராஸ் பின்பற்றியுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications