நவீன தீண்டாமை.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது சென்னை ஐஐடி
Recommended Video

சென்னை: சென்னை ஐஐடி உணவு விடுதியில் 'நவீன தீண்டாமை' கடைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மாணவர்களிடம், கல்வி நிறுவன நிர்வாக மன்னிப்பு கோரியுள்ளது.
சென்னை ஐஐடியில், சுத்தமான சைவம் என்று ஒரு பிரிவும், சைவம் சாப்பிடுபவர்கள் என்ற மற்றொரு பிரிவும், அசைவம் சாப்பிடுவோர் என்று 3 பிரிவுமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும், என்பதும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நோட்டீசும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது வெளியானது. இதை நவீன தீண்டாமை என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இதுபோன்ற நடைமுறைகளை ஏற்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்று தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர் மாணவர்களிடம் மன்னிப்பு கோரி மாணவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். சிரமமின்றி மாணவர்கள் செல்வதற்காகவே தனி வழி அமைக்கப்பட்டதே தவிர ஜாதி வெறுப்பாட்டிற்கு அல்ல. ஹோட்டல் உணவு வழங்கும் தனியார் நிறுவனம் கேட்டதாலேயே இத்தகைய முடிவில் ஈடுபட்டதாகவும் விடுதி கண்காணிப்பு குழு எந்த அறிவுறுத்தலையும் இது தொடர்பாக வழங்கவில்லை எனவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications