கொரோனா "அபாய பகுதியாக" மாறிய சென்னை ஐஐடி.. மேலும் 25 பேருக்கு தொற்று.. மொத்தம் 171 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தின் புதிய கொரோனா பரவல் மையமாக சென்னை ஐஐடி உருவெடுத்து வருகிறது. சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
நாட்டின் வட இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருநாள் கொரோனா பாதொப்பு எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டாத நிலையில் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 20,386 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 77 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனைகளில் 447 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையில் தான் அதிகபட்சமாக நேற்று மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பரவல் திடீரென தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஐஐடியில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிற நிலையில் புதிய தொற்று பரப்பும் பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. உருவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னை ஐ.ஐ.டியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் உருமாறிய புதுவகை வைரஸ் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications