கொரோனா "அபாய பகுதியாக" மாறிய சென்னை ஐஐடி.. மேலும் 25 பேருக்கு தொற்று.. மொத்தம் 171 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தின் புதிய கொரோனா பரவல் மையமாக சென்னை ஐஐடி உருவெடுத்து வருகிறது. சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
நாட்டின் வட இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருநாள் கொரோனா பாதொப்பு எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டாத நிலையில் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 20,386 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 77 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனைகளில் 447 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையில் தான் அதிகபட்சமாக நேற்று மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பரவல் திடீரென தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஐஐடியில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிற நிலையில் புதிய தொற்று பரப்பும் பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. உருவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னை ஐ.ஐ.டியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் உருமாறிய புதுவகை வைரஸ் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications