Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஐஐடியில் பிடெக் மாணவர் தற்கொலை! 3 மாதங்களில் நடக்கும் 4ஆவது தற்கொலை! பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 மாதங்களில் அங்கு நடக்கும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.

சென்னை கிண்டியில் சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது. அங்கே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

IIT Madras Student Found Dead, Fourth Suspected Suicide This Year

அதேநேரம் அங்கே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறியே வருகிறது. அதன்படி இன்றும் அதுபோல ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

தற்கொலை: சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள விடுதி அறையில் மாணவர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த மாணவர் இரண்டாம் ஆண்டு மாணவர் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு இது தற்கொலை என்பது உறுதியானால், கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடியில் நடக்கும் நான்காவது தற்கொலை இதுவாகும். தற்கொலையால் உயிரிழந்த மாணவர் பிடெக் 2ஆம் ஆண்டு படித்த கேதார் சுரேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர் தற்கொலைகளால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

தொடரும் தற்கொலை: முன்னதாக, ஏப்ரல் 2ஆம் தேதி, சென்னை ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வயது 32 வயதான சச்சின் குமார் என்று அடையாளம் காணப்பட்டது. இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

IIT Madras Student Found Dead, Fourth Suspected Suicide This Year

அதற்கு முன், மார்ச் மாதம் அங்கே மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான அவர், ஆந்திராவைச் சேர்ந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல பிப்ரவரியில், சென்னை ஐஐடியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு எண்கள்: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+