பாத்திமாவோட அன்லாக் செல்போன், லேப்டாப்.. தந்தையின் கண் முன்பாகவே.. தடயவியல் துறை ஆய்வு
மாணவி பாத்திமா லத்தீப் தந்தை சென்னை வந்துள்ளார்
Recommended Video
சென்னை: "என் மகளின் செல்போன், லேப்டாப் எங்க கிட்ட இருக்கு.. அதில் பாஸ்வேர்ட் போடப்பட்டுள்ளது.. அவைகளை அன்லாக் செய்து.. ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்று பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் கண்முன்னாடியே பாத்திமாவின் லேப்டாப், செல்போன்களை தடவியல் துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.
சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தந்தை அப்துல் லத்தீப் விசாரணைக்காக மீண்டும் தடவியல் துறைக்கு வந்திருந்தார்.
கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் போன 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

விசாரணை
இப்படி நாலா பக்கமும் விசாரணை நடந்துவரும் நிலையில், பாத்திமாவின் அப்பா திரும்பவும் சென்னை வந்துள்ளார். இவரிடம் பாத்திமாவின் செல்போன், லேப்டாப் போன்றவை இருக்கிறதாம். இந்த செல்போன், மற்றும் லேப்டாப்பில்தான் நிறைய தகவல்கள், பாத்திமாவின் மெயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

செல்போன்
ஆனால், லேப்டாப்பும், செல்போனும், பாஸ்வேர்டுகள் போடப்பட்டு உள்ளன. அதை ஓபன் செய்து ஆய்வு செய்ய சிரமமாக இருந்தது. அப்படி பாஸ்வேர்ட் ஓபன் செய்து ஆய்வு செய்தால், அதனை தங்கள் கண்முன்தான் ஆய்வு செய்ய வேண்டும் என பாத்திமா பெற்றோர் கோரிக்கை விடுத்து, டிஜிபி, தடயவியல் துறைக்கு ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.

சம்மன்
அதன்படி, எழும்பூர் கோர்ட் ஒப்புதல் அளித்து, பாத்திமாவின் தந்தை மற்றும் சகோதரிக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த சம்மனை அனுப்பப்பட்டதை அடுத்து, பாத்திமாவின் அப்பாவும், சகோதரியும் சென்னை தடவியல் துறைக்கு இன்று வந்தனர்.

விசாரணை
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியும் அங்கு வந்தார். போலீஸ் அதிகாரிகள், பாத்திமாவின் குடும்பத்தினர் முன்னிலையிலேயே செல்போன், லேப்டாப்கள் ஓபன் செய்யப்பட்டன. இந்த செல்போன், லேப்டாப்பின் பாஸ்வேர்ட்கள், பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவுக்கு தெரியும் என்பதால் எளிதாக அவைகள் ஓபன் செய்து பார்க்கப்பட்டன.

பிரதமர்
இந்த வழக்கில் முக்கிய தடயமாக செல்போன், லேப்டாப் உள்ளதால், அதில் உள்ள தகவல்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். விசாரணை அதிகாரி மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பாத்திமாவின் அப்பா தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வரை திரும்பவும் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று பிரதமரையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications