லண்டனில் இளையராஜாவின் முதல் சிம்பொனி இன்று! symphony என்றால் என்ன? சிம்பொனியின் சவால்கள் என்ன?
சென்னை: இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்கிறார். இதற்கு வேலியன்ட் என பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கிறார்கள்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவர் தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால் மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார். அதற்கு வேலியண்ட் என பெயரிட்டுள்ளார்.
லண்டனில் அரங்கேற்றம்
இதை இன்று லண்டனில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக அவர் கடந்த 6ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். சிம்பொனி என்றால் என்ன தெரியுமா, இதற்கு இளையராஜாவே அளித்த விளக்கத்தை பாருங்கள்.
சிம்பொனி என்றால் என்ன
ஒரே நேரத்தில் 4 கவிஞர்கள் 4 வித்தியாசமான கவிதைகளை சொன்னால் நம்மால் ரசிக்க முடியுமா- முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றிணைந்து தரும் இசையை நாம் கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் கனவு
இன்று சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜாவின் அது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986 ஆம் ஆண்டு, 1988 ஆகிய ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
திருவாசகம்
2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டதை அடுத்து அவர் தொடர்ந்து சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த சிம்பொனியின் சவால் என்ன தெரியுமா- 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுப்பதுதான்.
முதல் தமிழர்
இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு தமிழர் சிம்பொனியை அரங்கேற்றுவது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார்.
பெரிய இசை விருந்து
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இளையராஜா, விமான நிலையத்தில் கூறுகையில், புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக லண்டன் செல்கிறேன். ஈவன்டிம் அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களுக்கு இது பெரிய இசை விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்கிரிடிபிள் ராஜா
தமிழராக உணர்கிறேன் என்பதை விட மனிதராக உணர்கிறேன். இது என்னுடைய பெருமை அல்ல, நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. incredible இந்தியா மாதிரி, incredible இளையராஜா என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்பிரைட் வேண்டாம் என கூறியுள்ளது பற்றி கேட்ட போது, இளையராஜா, "அனாவசியமான கேள்வி என்னிடம் கேட்கக் கூடாது" என கோபமாக தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மேலும் கடந்த வாரம் இளையராஜாவின் வீட்டிற்கே சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவரிடம் சிம்பொனி நோட்ஸ்களையும் இளையராஜா காண்பித்து மகிழ்ந்தார். அது போல் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications