திருக்குறளில் இருந்து உருவான "பேர் வச்சாலும் வைக்காம" பாடல்.. இளையராஜாவின் சுவாரஸ்ய வீடியோ!
சென்னை: திருக்குறளில் இருந்து பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்கிற பாடல் எப்படி உருவானது என்ற சுவாரஸ்ய தகவலை இளையராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓடிடியில் டிக்கிலோனா என்ற படம் சந்தானம், அனகா நடிப்பில் வெளியானது. இந்த நகைச்சுவை கலந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இதில் "பேர் வச்சாலும் வைக்காம போனாலும்..." ரீமிக்ஸ் பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதோடு சமீபகாலங்களில் ரசிகர்களிடத்தில் பிரபலமான பாடலாகவும் மாறியுள்ளது. இந்த ரீமிக்ஸ் பாடலை யூடியூபில் 10 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளார்.
ஆபாசம்.. அடையாள குழப்பவாதி.. மீடியா இடம் கொடுக்குது பாருங்க: விட்டு விளாசிய பிடிஆர்.. யாரை தெரியுதா?
சுவாரஸ்ய தகவல்
இந்த நிலையில் பேர் வச்சாலும் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை யுவன்ஷங்கர் ராஜா தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய இளையராஜா பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலுக்கு ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இயக்குநர் சிங்கீதம் சீனிவாசனும் கமல்ஹாசனும் கம்போஸிங் அறையில் இருந்தார்கள்.
டியூன் போட்டாச்சு
அப்போது அந்த பாடலுக்கு டியூன் போட்டாச்சு. வாலி சாரை கூப்பிட்ட போது அவர் சந்தம் என்ன என கேட்டார். இப்படியெல்லாம் எப்படி பாடல் எழுதுவது என வாலி கேட்டார். ஏற்கெனவே எழுதினதுதானே என்றேன் நான். ஏற்கெனவே எழுதினாங்களா யாரு என கேட்டார். அதற்கு நான் அதான் வள்ளுவர் ஏற்கெனவே எழுதிவிட்டு போய்ட்டாரே என்றேன். அப்போது அவர் வள்ளுவரா அவர் என்ன எழுதினாரு என கேட்டார்.
துப்பார்க்கு
திருவள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" எனும் திருக்குறளை எடுத்துக் காட்டி இதே போன்று அச்சாரம் கொண்ட வரிகள் வேண்டும் என கேட்டு கொண்ட ரகசியத்தை தற்போது பொதுவெளியில் கூறியுள்ளார்.
எவர்கிரீன் பாடல்
இந்த பாடல் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்றிருந்தது. 90 களில் தமிழ் சினிமாவில் இளையராஜா இசையமைத்த எவர்கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பாடலை பாடலாசிரியர் வாலி எழுதியிருந்தார். இளையராஜா- வாலி கூட்டணியில் உருவான இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.