தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் அதிக மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை இருக்கும் என்பதால் இதனிடையே 2 அல்லது 3 குறைந்த காற்றழுத்தங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் , வங்கக் கடலில் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும். இதனால் நாளையும் (நவம்பர் 10) நாளை மறுநாளும் (நவம்பர் 11) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையின் அளவு
ஏற்கெனவே நாளை மட்டும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை மறுநாளும் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மழையின் அளவு குறையும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

நாளை மறுநாள்
தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றால் வருவாய் பேரிடர் மீட்பு படையினரும் அரசும் உடனடியாக வெள்ளப் பாதிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அர்த்தமாகும். அது போல் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களையும் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பெய்த் மழை
ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பெய்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியதை அடுத்து மேலும் மழை நீடிக்கும் என்பதாலும் அன்றைய தினம் சென்னைக்கு மட்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்போது தமிழகத்திற்கே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications