பெங்களூரில் பணியாற்றுவோருக்கு 60% வரை சம்பளம் உயர்வு.. கர்நாடகாவில் இனி குறைந்த ஊதியமே ரூ.23,376
பெங்களூர்: தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி கர்நாடகா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பெங்களூரில் உள்ள தொழிலாளர்களுக்கு இனி மாதத்திற்கு ரூ.23,376 குறைந்தபட்ச ஊதியமாகப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார்.
இதையடுத்து தொழிலாளர் துறை அதற்கான நடவடிக்கையை எடுத்து வந்தது. இந்நிலையில் தான் பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க முதல்வர் சித்தராமைய ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடகா தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ''எங்கள் அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி அறிவிப்பை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.
கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும். இது ஒரு முக்கிய தொழிலாளர் சீர்த்திருத்தம். பெங்களூரில் உள்ள திறமையான தொழிலாளர்கள் (Skilled Workers)மாதம் ரூ.31,114 பெற உரிமை உண்டு. கர்நாடகாவின் பிற பகுதிகளில், இருப்பிடம் மற்றும் வகையை பொறுத்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,300 முதல் ரூ.21,251 வரை இருக்கும்'' என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications