சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் துணை மின்நிலையத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்நிலையில் தான் சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANEDCO) எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் 110 கி.வோ உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் பணி மற்றும் ஏபி சுவிட்ச் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
அதன்படி பட்டாபிராம் மற்றும் சக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 12 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். ஏரியா வாரியாக பார்த்தால் பராமரிப்பு பணியின் காரணமாக பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன்நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், தெற்கு பஜார் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
அதேபோல் வள்ளலார் நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சிடிஎச் சாலை, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி நகர், ஐஏஎஃப் சாலை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும் மதியம் வரை மின்தடை ஏற்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை அறிவிப்பால் பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இன்று காலை 9 மணிக்கே பயன்படுத்தி கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications