கோவையில் ஷாக்.. ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா.. கிராமத்திற்கு சீல் வைப்பு.. எப்படி பரவியது?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கோவை அன்னூர் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறையக் குறைய இந்த ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த ஊரடங்கு தற்போது வரும் நவ.15ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேக்சின் பணிகள் காரணமாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் மொத்தம் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 835 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது சற்றே நிம்மதியைத் தருகிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிராமம்
கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கு கீழாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அங்கு அன்னூர் அருகே ஒரே கிராமத்தில் வெறும் மூன்று நாட்களில் மட்டும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பொகளூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கட்டாம்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி தீபாவளியன்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

29 பேருக்கு கொரோனா
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதனையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரே கிராமத்தில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
Recommended Video

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து தொற்று கண்டறியப்பட்டவர்களை அவர்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு கோவை ESI மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடீசியா கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து பொகளூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராமம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும், சொக்கட்டாம்பள்ளி கிராமத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் முள்வேலிகளால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கிராமத்திற்குச் சீல்
மேலும், அக்கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வெளியூர் பொதுமக்களும் இக்கிராமத்தினுள் நுழைய வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினரின் விசாரணையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காளிகுளம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் இல்ல துக்க நிகழ்விற்குச் சென்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

பெண் உயிரிழப்பு
இதற்கிடையே அங்கு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வந்த 30 வயதான சித்திரா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பெண் வசித்த வீடு இருக்கும் பகுதியிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, தூய்மைப்பணி செய்யப்பட்டது. அந்தப் பெண் கொரோனாவால் உயிரிழந்ததால் பெண்ணின் உடல் உறவினர்களிடம் தரப்படவில்லை. கோவையில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அன்னூர் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications