2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி இரு விஷயங்களை நன்கு தெளிவுப்படுத்திவிட்டது.
ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் முன் அறிவித்தார். அவ்வாறு அறிவித்து இரு ஆண்டுகளாகியும் அவர் கட்சியை தொடங்கவில்லை. எல்லாமே ரெடி இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி என்ற ரஜினி இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன் என்பது தெரியவில்லை.
இதனால் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ரஜினி கட்சித் தொடங்காதது குறித்து அரசியல்வாதிகள் பல கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

கனவில்
ஆனால் அண்மைகாலமாக ரஜினி தனது தொடர் பேட்டிகளின் மூலம் அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைக்கிறார். கமலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, முதல்வர் எடப்பாடி முதல்வராவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் ஒரு அதிசயம் நடந்தது.

கமலுடன் இணைந்து
அதுபோல் ஆட்சி கவிழும் என்றார்கள், அப்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அற்புதம் நிகழ்ந்தது. எனவே அதிசயம் நேற்றும் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்தது. நாளையும் நிகழும் என்றார். அது போல் கோவா செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழக நலனுக்காக தேவையேற்பட்டால் கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சி
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ரஜினி. அதில் அவரிடம் திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

கட்சி உறுதி
அதற்கு ரஜினி 2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினி தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலம் இரு விஷயங்கள் தெளிப்படுகின்றன. அதாவது ரஜினி 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சித் தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள்
இரண்டாவது விஷயம், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை மிக தெளிவாக புரிந்து வைத்து கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரஜினியின் பேட்டி அவரது தன்னம்பிக்கையையும் கட்சி தொடங்குவது என்ற உறுதியையும் காட்டுவதாக ரசிகர்கள் பூரித்து கொள்கின்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்











Click it and Unblock the Notifications