தமிழ்நாட்டில் மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலம்! திமுக மீது பாஜக அட்டாக்!
சென்னை: மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் ஊழல் குறித்து இன்று நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''கூட்டத்தில் திருடியவன், திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு முன்னால் ஓடுவது போல, ஊழலின் உறைவிடம் திமுகவில் இருந்து கொண்டு ஊழல் என்று பிறரைக் குறை சொல்வது பொதுமக்களை நகைக்க வைக்கும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்து விட்டார்.''
''மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில், தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும், சுங்கச் சாவடிகளிலும் இது போல வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா?ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.''
''மத்திய அரசு, ஒரே எண்ணில் பல கணக்குகள் இணைப்பது போன்ற தொழில் நுட்பக் குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, புதிய தொழில் நுட்பத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளைச் சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அதனைச் செய்யத் தவறிவிட்டு, மத்திய அரசு ஊழல் என்று புரியாமல் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.''












Click it and Unblock the Notifications