வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு ஏன் அவசியம்.. உச்சநீதிமன்றத்தில் பாயிண்ட்களை அடுக்கி பாமக வாதம்
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பாமக தரப்பிலிருந்து அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாமக ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தது.
வன்னியர்களின் நிலை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட மோசமான நிலையில் இருப்பதாக பாமக பரபரப்பாக வாதிட்டுள்ளது.

வன்னியர் ஒதுக்கீடு
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அது தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிவாதம் நேற்று தொடங்கிய நிலையில் தமிழக அரசு தரப்பில்மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, வில்சன், கிருஷ்ணமுர்த்தி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

95% பேர் கூலி வேலை
அதைத் தொடர்ந்து பாமக தரப்பில் இன்று பரபரப்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன. அதன்படி, வன்னியர் சமுதாய பெண்களில் 95% பேர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பதாகவும் அரைகோடி மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தில் பலரும் வாடகை வீடுகளில் தான் வசித்து வருவதாகவும் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் பாமக வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

விளக்கி கூறி வாதம்
10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஏன் அவசியம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த வாதம் அமைந்திருந்தது. மேலும், வன்னியர் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயமாக இருந்தாலும் கல்வி நிலையங்களை தொடங்க முடியவில்லை என்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மிக குறைவானவர்களே சேர முடிவதாகவும் பாமக விளக்கிக் கூறியது. இதனால் இவர்களை போன்றவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அவசியம் என வாதிட்டது.

இரண்டும் வெவ்வேறானவை
இதேபோல் 69 சதவீத இட ஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சட்ட பாதுகாப்பு பெற்றது என்றும் 10.5% இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது போல் இல்லை எனவும் இரண்டும் வெவ்வேறானவை எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. வன்னியர் சமுதாயத்தினரை பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட பல இடங்களில் மோசமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் வன்னியர் சமுதாயத்தினரால் சாலை போடுதல் உள்ளிட்ட பணிகளை தான் செய்ய முடிவதாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

இட ஒதுக்கீடு
நெல்லை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேலை கூட பார்ப்பதாகவும் இந்தச்சூழலில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அவசியமானது எனவும் பாமக தரப்பில் வலியுறுத்தும் விதமாக வாதிடப்பட்டது. இதனிடையே தமிழக அரசு வாதம், பாமக வாதம், மனுதாரர்கள் வாதம் என தீர்ப்பை நோக்கி இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருப்பதால் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசத் தொடங்கப்பட்டுள்ளது.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications