ஒரே நேரத்தில்.. ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை!
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் ஜாபர் சாதிக் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஜே.எஸ்.எம் விடுதி, அண்ணா சாலையில் உள்ள ஒரு விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரிக்கு அருகிலுள்ள ஜே.எஸ்.எம் விடுதியின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் இல்லத்திலும் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தியதாக, சினிமா தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்து இருந்தனர்.
இநிந்லையில் காபர் சாதிக் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இன்று ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். சென்னையில் ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்தது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications