தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு விமானத்தில் சென்றாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்.. டிஜிபி உத்தரவு
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு விமானத்தில் வருவோர், ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள் என்று அந்த மாநில போலீஸ் டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு சாலை மார்க்கமாக வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுதலுக்கு உள்ளாவார்கள் என்று அந்த மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையடுத்து பலரும் கர்நாடக எல்லை வரை கார்களில் சென்று விட்டு மறுபடி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, மே 25ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட உள்ளது. இப்போது கர்நாடக போலீஸ் டிஜிபி பிரவீன் சூட், ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழகம், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கர்நாடகா வரும், உள்நாட்டு விமானப் பயணிகள் 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பின், 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். இவ்வாறு கர்நாடக, போலீஸ், டிஜிபி தெரிவித்துள்ளார்.
வீட்டு தனிமைப்படுத்துதல் என்பது அவரவர் வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று பொருளாகும். மற்றொரு தனிமைப்படுத்துதல் என்பது, அரசு ஏற்பாடு செய்துள்ள ஓட்டல் அறைகளில் தங்குவது. இந்த ஓட்டல் அறைகளில் சுத்தம், சுகாதாரம் கிடையாது, அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றெல்லாம் புகார்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்தான், கர்நாடக டிஜிபி இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் வருவதற்கு மிகுந்த யோசனையுடன் உள்ளனர். இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏனெனில், பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கணிசமாக தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். இப்போது மறுபடியும் நிறுவனங்கள் திறந்து உள்ளதால் அவர்கள் இங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால், தனிமைப்படுத்துதல் விதிமுறை காரணமாக, வர முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications